search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    இசக்கி அம்மன்
    X
    இசக்கி அம்மன்

    காயாமொழி ராமநாதபுரம் இசக்கி அம்மன் கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடக்கிறது

    காயாமொழி ராமநாதபுரம் இசக்கி அம்மன் கோவில் திருவிழாவில் நாளை அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அன்னதானம் நடைபெறுகிறது.
    திருச்செந்தூர் அருகே காயாமொழி ராமநாதபுரம் சுடலைமாட சுவாமி உடனுறை இசக்கி அம்மன் கோவிலில் 39-ம் ஆண்டு வருசாபிஷேகம், பரிகார பூஜை மற்றும் கொடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று மாலையில் சுதர்சன ஹோமம் நடந்தது.

    இன்று (வியாழக்கிழமை) காலைகணபதி ஹோமம், தில ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு வல்லநாடு, சங்கரன்கோவில் செல்ல புறப்படுகின்றனர்.நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து அன்னதானம் நடைபெறுகிறது.

    இதைத்தொடர்ந்து  இரவு 7 மணிக்குமேல் கொடை விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×