என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் உள்கோடை உற்சவம் தொடக்கம்
Byமாலை மலர்10 May 2022 5:40 AM GMT (Updated: 10 May 2022 5:40 AM GMT)
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் தாயார் பூச்சாற்று உற்சவத்தின் உள்கோடை உற்சவம் தொடங்கியது.
பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெற்றது.
நேற்று உள்கோடை உற்சவம் தொடங்கியது. வெளிக்கோடை உற்சவத்தின் போது உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை வேளையில் வெளிக்கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். உள்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை நாலுக்கால் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின் இரவு 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார். மூலஸ்தான சேவை கிடையாது
பின்னர் அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பூச்சாற்று உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 13-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
நேற்று உள்கோடை உற்சவம் தொடங்கியது. வெளிக்கோடை உற்சவத்தின் போது உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை வேளையில் வெளிக்கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். உள்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை நாலுக்கால் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின் இரவு 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார். மூலஸ்தான சேவை கிடையாது
பின்னர் அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பூச்சாற்று உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 13-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X