search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தாயார் உள்கோடை உற்சவம் தொடக்கம்
    X
    தாயார் உள்கோடை உற்சவம் தொடக்கம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் உள்கோடை உற்சவம் தொடக்கம்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் தாயார் பூச்சாற்று உற்சவத்தின் உள்கோடை உற்சவம் தொடங்கியது.
    பூலோக வைகுண்டம் எனப்போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இக்கோவில் தாயார் சன்னதியில் கோடை திருநாள் எனப்படும் பூச்சாற்று உற்சவம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வருகிற 13-ந் தேதி வரை நடக்கிறது. கடந்த 4-ந்தேதி முதல் 8-ந் தேதி வரை வெளிக்கோடை உற்சவம் நடைபெற்றது.  

    நேற்று உள்கோடை உற்சவம் தொடங்கியது. வெளிக்கோடை உற்சவத்தின் போது உற்சவர் ரெங்கநாச்சியார் தினமும் மாலை வேளையில் வெளிக்கோடை மண்டபத்தில் புஷ்பம் சாத்துப்படி கண்டருளினார். உள்கோடை உற்சவத்தின் முதல் நாளான நேற்று உற்சவர் ரெங்கநாச்சியார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வெளிக்கோடை நாலுக்கால் மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருளிய பின் இரவு 7.30 மணிக்கு நாலுகால் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.45 மணிக்கு உள்கோடை ஆஸ்தான மண்டபத்தை சென்றடைந்தார். மூலஸ்தான சேவை கிடையாது

    பின்னர் அங்கிருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் இரவு 9.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். பூச்சாற்று உற்சவத்தையொட்டி தினமும் மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணிவரை தாயார் சன்னதியில் மூலஸ்தான சேவை கிடையாது. 13-ந்தேதி வீணை வாத்தியம் கிடையாது. இரவு 8 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
    Next Story
    ×