என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவன் சிலை
    X
    சிவன் சிலை

    திருக்காஞ்சியில் 64 அடி உயர சிவன் சிலை

    புஷ்கரணியையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையில் 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வைகாசி மாதம் பிறந்ததும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
    குருபகவான் பெயர்ச்சியடையும்போது அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கரணி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் இடம்பெறுகிறார்.

    இதையொட்டி கங்கை நிதிக்கு இணையானதாக கருதப்படும் திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இதற்காக பல்வேறு நதிகளில் இருந்தும் புனிதநீர் எடுத்து வரப்பட்டு சங்கராபரணி ஆற்றில் கலக்கப்பட உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புஷ்கரணியையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையில் 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வைகாசி மாதம் பிறந்ததும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் புஷ்கரணி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் மணவாளன், இந்து அறநிலையத்துறை அதிகாரி தங்கமணி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் புஷ்கரணி விழாவுக்குவரும் பக்தர்களுக்கானஅடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.திருக்காஞ்சியில் புஷ்கரணி விழா நடத்தப்படுவதையொட்டி 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது.

    குருபகவான் பெயர்ச்சியடையும்போது அந்த ராசிக்குரிய நதியில் புஷ்கரணி விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குருபகவான் இடம்பெறுகிறார்.

    இதையொட்டி கங்கை நிதிக்கு இணையானதாக கருதப்படும் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் கோவில் அருகே சங்கராபரணி ஆற்றில் புஷ்கரணி விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இதற்காக பல்வேறு நதிகளில் இருந்தும் புனிதநீர் எடுத்து வரப்பட்டு சங்கராபரணி ஆற்றில் கலக்கப்பட உள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புஷ்கரணியையொட்டி சங்கராபரணி ஆற்றின் கரையில் 64 அடி உயர சிவன் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த பணிகளை வைகாசி மாதம் பிறந்ததும் தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் புஷ்கரணி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், பொது சுகாதார கோட்ட செயற்பொறியாளர் முருகானந்தம், கட்டிடங்கள் மற்றும் சாலைகள் தெற்கு கோட்ட செயற்பொறியாளர் மணவாளன், இந்து அறநிலையத்துறை அதிகாரி தங்கமணி, வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், உதவி பொறியாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    அப்போது திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் புஷ்கரணி விழாவுக்குவரும் பக்தர்களுக்கானஅடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
    Next Story
    ×