என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தமிழகத்தின் உள்ள சக்தி பீடங்கள்
Byமாலை மலர்26 April 2022 9:09 AM GMT (Updated: 26 April 2022 9:09 AM GMT)
இந்தியாவில் 51 சக்தி பீடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றை பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
பார்வதி தேவி தட்சனின் மகளாக தாட்சாயிணி என்ற பெயரில் பிறந்தபொழுது, சிவபெருமானை மணம் புரிந்து கொண்டாள். அது தட்சனுக்குப் பிடிக்கவில்லை.
இதனால் அவன் நடத்திய யாகத்திற்கு அனைத்து தெய்வங்களையும், தேவர்களையும், முனிவர்களையும் அழைத்திருந்தான். ஆனால் சிவபெருமானையும், தனது மகளையும் அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தட்சனின் யாகம் அழிய சாபம் கொடுத்ததோடு, தன் உயிரையும் மாய்த்தாள். அவள் உடல் பரத தேசத்தின் பல பகுதிகளில் விழுந்ததாகவும், ஒவ்வொரு அங்கமும் விழுந்த இடத்தில் ஒவ்வொரு சக்தி பீடம் உருவானதாகவும் நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 51 சக்தி பீடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
* காமாட்சி - காஞ்சிபுரம் (காமகோடி பீடம்)
* மீனாட்சி - மதுரை (மந்திரிணி பீடம்)
* பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம் (சேது பீடம்)
* அகிலாண்டேஸ்வரி - திருவானைக்காவல் (ஞானபீடம்)
* அபிதகுஜாம்பாள்- திருவண்ணாமலை (அருணை பீடம்)
* கமலாம்பாள் - திருவாரூர் (கமலை பீடம்)
* பகவதி - கன்னியாகுமரி (குமரி பீடம்)
* மங்களாம்பிகை - கும்பகோணம் (விஷ்ணு சக்திபீடம்)
* அபிராமி - திருக்கடையூர் (கால பீடம்)
* மகாகாளி - திருவாலங்காடு (காளி பீடம்)
* பராசக்தி - திருக்குற்றாலம் (பராசக்தி பீடம்)
* லலிதா - ஈங்கோய் மலை, குளித்தலை (சாயா பீடம்)
* விமலை, உலகநாயகி - பாபநாசம் (விமலை பீடம்)
* காந்திமதி - திருநெல்வேலி (காந்தி பீடம்)
* பிரம்மவித்யா - திருவெண்காடு (பிரணவ பீடம்)
* தர்மசம்வர்த்தினி - திருவையாறு (தர்ம பீடம்)
* திரிபுரசுந்தரி - திருவொற்றியூர் (இஷீபீடம்)
* மகிஷமர்த்தினி - தேவிபட்டினம் (வீரசக்தி பீடம்)
இதனால் அவன் நடத்திய யாகத்திற்கு அனைத்து தெய்வங்களையும், தேவர்களையும், முனிவர்களையும் அழைத்திருந்தான். ஆனால் சிவபெருமானையும், தனது மகளையும் அழைக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட தாட்சாயிணி, தட்சனின் யாகம் அழிய சாபம் கொடுத்ததோடு, தன் உயிரையும் மாய்த்தாள். அவள் உடல் பரத தேசத்தின் பல பகுதிகளில் விழுந்ததாகவும், ஒவ்வொரு அங்கமும் விழுந்த இடத்தில் ஒவ்வொரு சக்தி பீடம் உருவானதாகவும் நம்பப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் 51 சக்தி பீடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் 18 சக்தி பீடங்கள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்க்கலாம்.
* காமாட்சி - காஞ்சிபுரம் (காமகோடி பீடம்)
* மீனாட்சி - மதுரை (மந்திரிணி பீடம்)
* பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம் (சேது பீடம்)
* அகிலாண்டேஸ்வரி - திருவானைக்காவல் (ஞானபீடம்)
* அபிதகுஜாம்பாள்- திருவண்ணாமலை (அருணை பீடம்)
* கமலாம்பாள் - திருவாரூர் (கமலை பீடம்)
* பகவதி - கன்னியாகுமரி (குமரி பீடம்)
* மங்களாம்பிகை - கும்பகோணம் (விஷ்ணு சக்திபீடம்)
* அபிராமி - திருக்கடையூர் (கால பீடம்)
* மகாகாளி - திருவாலங்காடு (காளி பீடம்)
* பராசக்தி - திருக்குற்றாலம் (பராசக்தி பீடம்)
* லலிதா - ஈங்கோய் மலை, குளித்தலை (சாயா பீடம்)
* விமலை, உலகநாயகி - பாபநாசம் (விமலை பீடம்)
* காந்திமதி - திருநெல்வேலி (காந்தி பீடம்)
* பிரம்மவித்யா - திருவெண்காடு (பிரணவ பீடம்)
* தர்மசம்வர்த்தினி - திருவையாறு (தர்ம பீடம்)
* திரிபுரசுந்தரி - திருவொற்றியூர் (இஷீபீடம்)
* மகிஷமர்த்தினி - தேவிபட்டினம் (வீரசக்தி பீடம்)
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X