என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவிடந்தை நித்யபெருமாள் கோவில் தெப்போற்சவம்
    X
    திருவிடந்தை நித்யபெருமாள் கோவில் தெப்போற்சவம்

    திருவிடந்தை நித்யபெருமாள் கோவில் தெப்போற்சவம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் தெப்போற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை நித்ய பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 16-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 22-ம் தேதி நித்திய கல்யாண பெருமாள் தேவியருடன் அலங்கார திருத்தேரில் எழுந்தருளி, ராஜ அலங்காரத்தில் மாடவீதிகளில் உலா சென்று வந்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு இவ்விழா நடப்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    சித்திரை பிரம்மோற்சவ பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தெப்போற்சவம் நேற்று இரவு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×