என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆலங்குடி குரு பகவான்
    X
    ஆலங்குடி குரு பகவான்

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை பூர்த்தி விழா

    ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை பூர்த்தி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் திருஞானசம்பந்தரால் தேவாரப்பாடல் பெற்றது. நவக்கிரகங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியடையும் நாளில் இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 14-ந்தேதி குருபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு பெயர்ச்சியடைந்ததையொட்டி இக்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. குருப்பெயர்ச்சியையொட்டி குருபகவானுக்கு லட்சார்ச்சனை விழா கடந்த 6-ந்தேதி   தொடங்கி 10-ந்்தேதி வரை முதல்கட்டமாக நடைபெற்றது. குருப்பெயர்ச்சிக்கு பின்னர் 2-வது கட்டமாக லட்சார்ச்சனை விழா கடந்த 18-ந்தேதி முதல் தொடங்கி  நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். லட்சார்ச்சனையை ரமேஷ்சாமிநாதசிவாச்சாரியார், சுரேஷ்ஞானஸ்கந்தன் சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

    லட்சார்ச்சனை பூர்த்தி விழாவையொட்டி குருபகவானுக்கும், உற்சவர்  தட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் தக்கார்- அறநிலைய உதவிஆணையர் ஹரிஹரன், அறநிலைய உதவி ஆணையர்- செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×