என் மலர்tooltip icon

    வழிபாடு

    சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா
    X
    சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா

    சத்தியமங்கலம் தண்டு மாரியம்மன் கோவில் குண்டம் விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர்

    இன்று (வியாழக்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
    சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் பழமையான தண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மனின் அக்காள் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவிலில் குண்டம் விழாவுக்காக கடந்த 4-ந் தேதி பூச்சாட்டப்பட்டது. 7-ந் தேதி இரவு கோவிலின் முன்பு பெரிய கம்பம் நடப்பட்டது.
    அன்று முதல் ஒவ்வொரு நாள் இரவும் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் கம்பம் ஆட்டம் ஆடி வருகிறார்கள். இதைக்காணவும் பக்தர்கள் திரண்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று குண்டம் விழா நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் பவானி ஆற்றுக்கு சென்று புனித நீராடினார்கள். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த உற்சவ அம்மனை வணங்கிவிட்டு மேளதாளங்கள் முழங்க கையில் வேப்பிலையுடன் கோவிலை நோக்கி வந்தார்கள்.
    முன்னதாக கோவிலுக்கு முன்பு குண்டம் அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. இதைத்தொடர்ந்து தலைமை பூசாரி மல்லிகைப்பூ பந்தை உருட்டிவிட்டு, குண்டத்துக்கு பூஜை செய்தார். பின்னர் நெருப்பு துண்டுகளை 3 முறை கைகளால் அள்ளி வீசினார். இதையடுத்து மணியை ஒலித்தபடி குண்டம் இறங்கினார். அப்போது திரண்டிருந்த பக்தர்கள் ‘அம்மா தண்டு மாரியே’ என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள்.

    தலைமை பூசாரியை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். ஒரு சிலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டு இறங்கியதையும் காணமுடிந்தது.

    இன்று (வியாழக்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) விளக்கு பூஜையும், நாளை மறுநாள் மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. வருகிற 28-ந் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.
    Next Story
    ×