search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்ப திருவிழா
    X
    பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்ப திருவிழா

    பாளையங்கோட்டை சிவன் கோவில் தெப்ப திருவிழா

    அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். பல வருடங்களுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்ததால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் கோவில் (சிவன் கோவில்) மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவில் சித்திரை திருவிழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெற்றது.

    கடந்த 13-ந் தேதி சுவாமி- அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள், 63 நாயன்மார்கள் வீதி உலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் கடந்த 15-ந்தேதி நடந்தது.

    தெப்ப உற்சவ விழா நேற்று இரவு நடந்தது. இதையொட்டி பாளையங்கோட்டை சிவன் கோவில் அருகே உள்ள தெப்பகுளம் தண்ணீர் நிரப்பப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இரவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் திரிபுராந்தீஸ்வரர்- கோமதியம்பாள் கோவிலில் இருந்து தெப்பக்குளத்திற்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி- அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். தொடர்ந்து தெப்பகுளத்தில் மேளதாளம் முழங்க 11 சுற்றுகள் வலம் வந்தனர். பல வருடங்களுக்கு பிறகு தெப்ப உற்சவம் நடந்ததால் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தெப்ப திருவிழாவையொட்டி அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    Next Story
    ×