என் மலர்
வழிபாடு

சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
சுதர்சன பட்டாச்சாரியார் உள்ளிட்ட குருக்கள் வேதங்கள் முழங்க மங்கல வாத்தியம் இசைக்க சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பக்தர்கள் ராமா, ராமா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
சேலம் கோட்டை அழகிரிநாதர் என்று அழைக்கப்படும் பெருமாள் கோவிலில் கடந்த 4-ந் தேதி ராமநவமி உற்சவம் தொடங்கியது. இதையொட்டி தினமும் ராமருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் முக்கிய நிகழ்வான சீதா திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. அதிகாலையில் வெங்கடேச பெருமாளுக்கும், லட்சுமி தாயாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.
பின்னர் சீதா, ராமருக்கு கங்கண கயிறு கட்டப்பட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பூர்ணாஹுதி முடிந்தவுடன் பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்ய தாரணம் வைபவம் நடைபெற்றது. சுதர்சன பட்டாச்சாரியார் உள்ளிட்ட குருக்கள் வேதங்கள் முழங்க மங்கல வாத்தியம் இசைக்க சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, பக்தர்கள் ராமா, ராமா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ராமபிரானுக்கும், சீதாவுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பின்னர் சீதா, ராமருக்கு கங்கண கயிறு கட்டப்பட்டு ஹோமங்கள் நடத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து பூர்ணாஹுதி முடிந்தவுடன் பக்தர்கள் முன்னிலையில் மாங்கல்ய தாரணம் வைபவம் நடைபெற்றது. சுதர்சன பட்டாச்சாரியார் உள்ளிட்ட குருக்கள் வேதங்கள் முழங்க மங்கல வாத்தியம் இசைக்க சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, பக்தர்கள் ராமா, ராமா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து ராமபிரானுக்கும், சீதாவுக்கும் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story






