search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1008 பால்குட ஊர்வலம்
    X
    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1008 பால்குட ஊர்வலம்

    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு 1008 பால்குட ஊர்வலம்

    புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு 1008 பால்குடம் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் உள்ள மாரியம்மனுக்கு, ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு முத்துமாரி சுக்ரவார வழிபாட்டு குழு சார்பில் 1008 பால்குடம் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன்படி இந்த ஆண்டு 16-வது பால்குட ஊர்வலம் கைலாசநாதர் கோவிலில் இருந்து புறப்பட்டது.

    ஊர்வலம் 4 ராஜவீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை  விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×