search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சீனிவாச பெருமாள்
    X
    சீனிவாச பெருமாள்

    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்

    14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தீவுத்திடலில் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
    திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 6-ந் தேதி சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும், சென்னை தீவுத்திடலில் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. இதற்காக உற்சவர் சாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்படுவதுடன், பண்டிதர்கள் திருமலையில் இருந்து வர உள்ளனர்.

    இதனையொட்டி தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தலைமையில் பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து மேடை மற்றும் பக்தர்கள் அமரும் பகுதிகள் அமைக்கும் பணியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நியமித்துள்ள குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் போலீஸ்துறை, சுற்றுலா, அறநிலையத்துறை, வருவாய், தீயணைப்பு, போக்குவரத்து, சுகாதாரம், மாநகராட்சி, உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது.

    நிகழ்ச்சி நடக்கும் தீவுத்திடலில் காவல் துறை உயர் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அறநிலையத்துறை அரசு செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் மற்றும் உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக அறநிலையத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவுகளையும் பிறப்பித்து உள்ளனர். பாதுகாப்பான முறையில் திருக்கல்யாணம் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக்குழு தலைவர் ஏ.ஜெ.சேகர்ரெட்டி கூறி உள்ளார்.
    Next Story
    ×