என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சங்கமேஸ்வரர் கோவில் தெற்கு வாசல் மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி
Byமாலை மலர்6 April 2022 5:44 AM GMT (Updated: 6 April 2022 5:44 AM GMT)
பராமரிப்பு பணி காரணமாக பவானி சங்கமேஸ்வரர் கோவில் தெற்கு வாசல் மூடப்பட்டு உள்ளதால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கோவிலின் கிழக்கு வாசலை திறக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
பவானி கூடுதுறையில் பிரசித்தி பெற்ற சங்கமேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு 4 வாசல்கள் உள்ளன. இதில் வடக்கு வாசல் கோவிலின் முக்கிய பிரதான வாசலாக உள்ளது. பவானி கூடுதுறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் புனித நீராடும் பக்தர்கள் அங்கிருந்து தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் வழியாக கோவிலுக்கு வந்து சாமியை தரிசிப்பது வழக்கம். மேற்கு வாசல் கோவில் யானை வந்து செல்லும் வாசலாக உள்ளது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவிலின் தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் மூடப்பட்டன. தற்போது வரை இந்த வாசல்கள் திறக்கப்படவே இல்லை. மேலும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழ அரசு திரும்ப பெற்றுவிட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் திறக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் நடமாட்டம் இன்றி இருந்தால் கோவில் பின்புறம் உள்ள பூங்கா பகுதி முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்கா பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. நடைபாதை மோசம் அடைந்து உள்ளது. எனவே அதை சீரமைப்பது குறித்த ஆய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் சீரமைப்பு பணிகள் நடைபெறும் வரையில் தற்காலிகமாக தெற்கு வாசல் திறக்கப்பட வாய்ப்பில்லை. நடைபாதை சீரமைக்கப்பட்ட பின்னர் தெற்கு வாசல் திறக்கப்படும்,’ என்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘ தெற்கு வாசல் அடைக்கப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் புனித நீராடி விட்டு கோவிலுக்கு செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். அதே நேரத்தில் கோவிலின் கிழக்கு வாசல் பகுதி நன்றாக உள்ளது. அந்த வாசல் வழியாக கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர்.
கொரோனா ஊரடங்கு காலத்தில் கோவிலின் தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் மூடப்பட்டன. தற்போது வரை இந்த வாசல்கள் திறக்கப்படவே இல்லை. மேலும் கொரோனா காலத்தில் எடுக்கப்பட்ட அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் தமிழ அரசு திரும்ப பெற்றுவிட்டது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள தெற்கு மற்றும் கிழக்கு வாசல்கள் திறக்கப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் நடமாட்டம் இன்றி இருந்தால் கோவில் பின்புறம் உள்ள பூங்கா பகுதி முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பூங்கா பகுதி சிதிலமடைந்து காணப்படுகிறது. நடைபாதை மோசம் அடைந்து உள்ளது. எனவே அதை சீரமைப்பது குறித்த ஆய்வு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இதனால் சீரமைப்பு பணிகள் நடைபெறும் வரையில் தற்காலிகமாக தெற்கு வாசல் திறக்கப்பட வாய்ப்பில்லை. நடைபாதை சீரமைக்கப்பட்ட பின்னர் தெற்கு வாசல் திறக்கப்படும்,’ என்றனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ‘ தெற்கு வாசல் அடைக்கப்பட்டு உள்ளதால் காவிரி ஆற்றில் புனித நீராடி விட்டு கோவிலுக்கு செல்ல முடியாமல் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறோம். அதே நேரத்தில் கோவிலின் கிழக்கு வாசல் பகுதி நன்றாக உள்ளது. அந்த வாசல் வழியாக கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்,’ என கோரிக்கை விடுத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X