
கோயிலை சுற்றி அக்னி கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் மற்றும் மத்தளம் தட்டி வரும் நிகழ்ச்சியும் நடந்தது. அப்போது பக்தர் ஒருவர் படுத்தபடி வயிற்றின் மீது அக்னி சட்டியை வைத்துக்கொண்டும், மற்றொரு பக்தர் வயிற்றின் மீது மத்தளத்தை வைத்து படுத்தபடி அடித்துக்கொண்டு கோயிலை சுற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து கோவில் முன்பு விராலி இலைகள் மூலம் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த பந்தலில் அமர்ந்து இருந்தால் அவர்கள் நோய் நொடி இல்லாமல் இருப்பர் என்பது ஐதீகம். இதனால் ஏராளமான பக்தர்கள் விராலி இலை பந்தலில் அமர்ந்து சென்றனர்.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபடுவார்கள்.