என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவிலில் கொடிமரத்திற்கு தீபாராதனை காட்டப்பட்ட காட்சி.
கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
By
மாலை மலர்6 April 2022 3:36 AM GMT (Updated: 6 April 2022 3:36 AM GMT)

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வரும் 15-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது.
கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவிலில் பங்குனி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணி மேல் 6.30 மணிக்குள் கொடி மரத்தில் கொடியேற்றம் நடை பெற்றது.
பின்னர் சுவாமி அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழா வரும் 15-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங் களில் எழுந்தருளி, திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் விழாக்கள் நடைபெறும்.
1-ம் திருநாளான நேற்று பிராமணாள் சமூகம் சார்பில் இரவு 7மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது. 2-ம் திருநாளான 6-ந்தேதி பூலோகப்பாண்டியத்தேவர் மற்றும் ரத்தினவேல்சாமித் தேவர் சார்பில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 3-ம் திருநாளான 7-ந்தேதி இல்லத்துப்பிள்ளைமார் சமூகம் சார்பில் பூதவாகனம் - காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது.
4-ம் திருநாளான 8-ந்தேதி மேடைத்தளவாய் கட்டளை தாரர் சார்பில் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதிஉலா மற்றும் குடவரை வாசல் தரிசனம் நடைபெறவுள்ளது. 5ம் திருநாளான 9-ந்தேதி விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத் தில் சுவாமி அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.
6-ம் திருநாளான 10-ந்தேதி அழகர் ஜூவல் லர்ஸ் அழகிரிசாமி செட்டியார் சார்பில் இரவு 7 மணிக்கு யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.
7-ம் திருநாளான 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில், நடராஜர் சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 8-ம் திருநாள் 12-ம் தேதி இரவு 7 மணிக்கு சைவ செட்டியார் கள் சங்கம் சார்பில் குதிரை வாகனம், கிளி வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
9-ம் திருநாளான 13-ந் தேதி காலை 9 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது. 9-ம் திருநாளான வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு யானை முன் செல்ல வாண வேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா நடை பெறுகிறது.
10-ம் திருநாளான 14-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
11-ம் திருநாளான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வாணவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங் கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.
அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருவனந்தல் பூஜை, திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணி மேல் 6.30 மணிக்குள் கொடி மரத்தில் கொடியேற்றம் நடை பெற்றது.
பின்னர் சுவாமி அம்பாள், கொடி மரம், நந்தி பலிபீடம் மற்றும் பரிவார மூர்த்தி களுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழா வரும் 15-ந்தேதி வரை தொடர்ந்து 11 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 8 மணி, இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங் களில் எழுந்தருளி, திரு வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர். ஒவ்வொருநாளும் ஒவ்வொரு மண்டக படிதாரர்கள் சார்பில் விழாக்கள் நடைபெறும்.
1-ம் திருநாளான நேற்று பிராமணாள் சமூகம் சார்பில் இரவு 7மணிக்கு சுவாமி அம்பாள் பூங்கோவில் சப்பரத்தில் திருவீதி உலா நடைபெற உள்ளது. 2-ம் திருநாளான 6-ந்தேதி பூலோகப்பாண்டியத்தேவர் மற்றும் ரத்தினவேல்சாமித் தேவர் சார்பில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது. 3-ம் திருநாளான 7-ந்தேதி இல்லத்துப்பிள்ளைமார் சமூகம் சார்பில் பூதவாகனம் - காமதேனு வாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறுகிறது.
4-ம் திருநாளான 8-ந்தேதி மேடைத்தளவாய் கட்டளை தாரர் சார்பில் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாள் திருவீதிஉலா மற்றும் குடவரை வாசல் தரிசனம் நடைபெறவுள்ளது. 5ம் திருநாளான 9-ந்தேதி விஸ்வகர்ம தொழிலாளர் சங்கம் சார்பில் இரவு 7 மணிக்கு காமதேனு வாகனத் தில் சுவாமி அம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது.
6-ம் திருநாளான 10-ந்தேதி அழகர் ஜூவல் லர்ஸ் அழகிரிசாமி செட்டியார் சார்பில் இரவு 7 மணிக்கு யானை மற்றும் அன்னவாகனத்தில் சுவாமி அம்பாள் திருவீதி உலா நடைபெறும்.
7-ம் திருநாளான 11-ந் தேதி இரவு 7 மணிக்கு சைவ வேளாளர் சங்கம் சார்பில், நடராஜர் சப்பரத்தில் சிவப்பு சாத்திய கோலத்தில் எழுந்தருளல் நடக்கிறது. 8-ம் திருநாள் 12-ம் தேதி இரவு 7 மணிக்கு சைவ செட்டியார் கள் சங்கம் சார்பில் குதிரை வாகனம், கிளி வாகனத்தில் சுவாமி - அம்பாள் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர்.
9-ம் திருநாளான 13-ந் தேதி காலை 9 மணிக்கு கம்மவார் சங்கம் சார்பில் தேரோட்டம் நடக்கிறது. 9-ம் திருநாளான வணிக வைசிய சங்கம் மண்டகபடிதாரர் சார்பில் இரவு 7 மணிக்கு யானை முன் செல்ல வாண வேடிக்கைகள் முழங்க யானை மற்றும் அன்ன வாகனத்தில் சுவாமி - அம்பாள் வீதி உலா நடை பெறுகிறது.
10-ம் திருநாளான 14-ந் தேதி மாலை 6 மணிக்கு ஆயிர வைசிய காசுக்கார செட்டி பிள்ளைகள் சங்கம் சார்பில் தீர்த்தவாரி தீபாராதனை நடக்கிறது. இரவு 12 மணிக்கு ரிஷப வானத்தில் சுவாமி - அம்பாள் எழுந் தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
11-ம் திருநாளான 15-ந் தேதி இரவு 7 மணிக்கு கோவில்பட்டி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் வாணவேடிக்கைகள் முழங்க மலர்களால் அலங் கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாள் எழுந்தருளி தெப்ப திருவிழா நடைபெற உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
