search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கோவில்
    X
    திருச்செந்தூர் கோவில்

    திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்தம் திருவிழா 7-ந்தேதி தொடங்குகிறது

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சித்திரை வசந்த திருவிழா வருகிற 7-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 16-ந்தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வருடம்தோறும் சித்திரை மாதத்தில் சித்திரை வசந்த திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 16-ந் தேதி (சனிக்கிழமை) வரை நடக்கிறது.

    விழாவில் ஒவ்வொரு நாளும் பகலில் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு மாலை நேரங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்று இரவு கிரி வீதி வழியாக திருக்கோவில் வந்து சேர்க்கை நடைபெறும்.

    ஏற்பாடுகளை கோவில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×