என் மலர்
வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி பகதூர் பேட்டையில் கருப்பு கங்கையம்மன் திருவிழா
ஸ்ரீகாளஹஸ்தி பகதூர் பேட்டையில் கருப்பு கங்கையம்மன் திருவிழா
ஸ்ரீகாளஹஸ்தி பகதூர் பேட்டையில் உள்ள கருப்பு கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்து, தீப, தூப நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த பகதூர்பேட்டை பகுதியில் நேற்று கருப்பு கங்கையம்மன் திருவிழா நடந்தது. அதிகாலை உற்சவர் கருப்பு கங்கையம்மனுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள் செய்து, தீப, தூப நைவேத்தியங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதிகாலை முதலே பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். பக்தர்கள் கருப்பு கங்கையம்மனுக்கு பொங்கல் வைத்தும், ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மன் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன் ரெட்டி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்.எல்.ஏ.பியப்பு.மதுசூதன் ரெட்டி, சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு. தாரக சீனிவாசுலு மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story