
அப்போது கோவில் வளாகம், சுவர், கூரை, பாத்திரங்கள் போன்றவற்றை நீரால் சுத்தப்படுத்தி, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி மஞ்சள், மஞ்சள், கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம் போன்ற சுகந்த திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்படுகிறது. பின்னர் காலை 9.30 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
2-ந் தேதி உகாதி தினத்தையொட்டி ஆஸ்தானம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக காலையில் சுவாமி சுப்ரபாதம் எழுந்தருளி தோமாலை, கொலுவு, அர்ச்சனை நடக்கிறது. மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பஞ்சாங்க ஷ்ரவணம் மற்றும் உகாதி ஆஸ்தானம் நடைபெறும்.