
தொடர்ந்து, சென்னை, ஜி.என்.செட்டி சாலையில் நடந்து வரும் பத்மாவதி தாயார் கோவில் கட்டுமான பணிகள், மின்சார வாரிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறியதாவது:-
இந்த திருக்கல்யாணத்தில் அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளது.
இதனால், பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் நடத்தப்படும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சாமி, தாயார் உற்சவ மூர்த்திகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், அன்னமாச்சார்யா கலை குழுவினர் மற்றும் இதர துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் திருக்கல்யாணம் நடத்தப்படும். 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.