என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
Byமாலை மலர்26 March 2022 8:08 AM GMT (Updated: 26 March 2022 8:08 AM GMT)
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 25-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இவ்விழாவையொட்டி மாரியம்மன் நேற்று முன்தினம் (24-ந் தேதி) கோவிலில் இருந்து புறப்படாகி மீனாட்சி அம்மன் கோவிலை வந்தடைந்தார்.
அங்கு கோவிலில் நேற்று மாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு அவர் யானை மீது அமர்ந்து நான்கு சித்திரை வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு இரவு மாரியம்மன் கோவிலில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொடிபட்டம் யானை மீது வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
அங்கு கோவிலில் நேற்று மாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு அவர் யானை மீது அமர்ந்து நான்கு சித்திரை வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு இரவு மாரியம்மன் கோவிலில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொடிபட்டம் யானை மீது வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X