
அங்கு கோவிலில் நேற்று மாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து கொடிபட்டத்தை பூசாரி பெற்று கொண்டு அவர் யானை மீது அமர்ந்து நான்கு சித்திரை வீதி வழியாக வலம் வந்து தெப்பக்குளம் கோவிலுக்கு சென்றடைந்தனர். அங்கு இரவு மாரியம்மன் கோவிலில் பங்குனித்திருவிழா கொடியேற்றம் நடந்தது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொடிபட்டம் யானை மீது வருவதாக பக்தர்கள் தெரிவித்தனர். விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.