என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
காரைக்கால் அம்மையார்
சுவாதி நட்சத்திரத்தையொட்டி காரைக்கால் அம்மையார் கோவிலில் ஐக்கிய விழா
By
மாலை மலர்23 March 2022 7:07 AM GMT (Updated: 23 March 2022 7:14 AM GMT)

காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக சுவாதி நட்சத்திரத்தில் அம்மையார் ஐக்கிய விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
63 நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவர் புனிதவதியார் என்னும் காரைக்கால் அம்மையார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பிராந்தியமாக உள்ள காரைக்கால் பாரதியார் சாலையில், நித்தியக்கல்யாணப்பெருமாள் கோவில் அருகே காரைக்கால் அம்மையார் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் சிறப்புமிக்க மாங்கனித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக சுவாதி நட்சத்திரத்தில் அம்மையார் ஐக்கிய விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் சுவாதி நட்சத்திர நாளில் காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடந்தது. அது சமயம் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அன்று இரவு மின் அலங்கார ரதத்தில், காரைக்கால் அம்மையார் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. வீதியுலா நிகழ்ச்சியின் போது பக்தர்கள் வீதிதோறும் அம்மையாருக்கு பூரண கும்பம் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கைலாசநாதர் கோவிலுக்கு சென்று இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி சிறப்பு தீபாராதனையுடன் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் நிறைவாக சுவாதி நட்சத்திரத்தில் அம்மையார் ஐக்கிய விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் சுவாதி நட்சத்திர நாளில் காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழா நடந்தது. அது சமயம் காரைக்கால் அம்மையாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அன்று இரவு மின் அலங்கார ரதத்தில், காரைக்கால் அம்மையார் வீதிஉலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. வீதியுலா நிகழ்ச்சியின் போது பக்தர்கள் வீதிதோறும் அம்மையாருக்கு பூரண கும்பம் வைத்து வழிபட்டனர். தொடர்ந்து கைலாசநாதர் கோவிலுக்கு சென்று இறைவனிடம் ஐக்கியமாகும் நிகழ்ச்சி சிறப்பு தீபாராதனையுடன் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
