search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பருத்தி பஞ்சு, சோழி வைத்து பூஜை
    X
    சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பருத்தி பஞ்சு, சோழி வைத்து பூஜை

    சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் பருத்தி பஞ்சு, சோழி வைத்து பூஜை

    கடந்த மார்ச் 3-ந்தேதி முதல் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ளது, சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில். நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது. சுப்பிரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் உள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவான பொருள் பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப்பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

    இந்த நிலையில் திருப்பூர் நாச்சிபாளையத்தை சேர்ந்த பானுமதி (வயது 40) என்ற பக்தரின் கனவில் உத்தரவான இலவம் பஞ்சு, பருத்தி பஞ்சு, சோழி ஆகிய பொருட்கள் நேற்று முதல் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச் 3-ந்தேதி முதல் கண்ணாடி குவளையில் உப்பு, நீர், நாணயங்கள், சிவலிங்கம் ஆகிய பொருட்கள் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×