search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
    X
    சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

    பெருமாள்-கோமளவள்ளி தாயார் ஊஞ்சலில் அமர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
    கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். பத்து நாட்கள் நடைபெறும் இந்த உற்சவம் கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் உற்சவம் நேற்று இரவு நடைபெற்றது. பெருமாள்-கோமளவள்ளி தாயார் ஊஞ்சலில் அமர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாள் தாயாரை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×