search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவள்ளூர் வீரராகவர் கோவில்
    X
    திருவள்ளூர் வீரராகவர் கோவில்

    திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்பத் திருவிழா: 2 ஆண்டுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி

    திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளக்கரையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன.
    திருவள்ளூரில் உள்ள வைத்திய வீரராகவர் பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற தலமாகவும் விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத தெப்ப உற்சவம் 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான மாசி மாத தெப்ப உற்சவம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.

    விழாவை முன்னிட்டு கோவிலில் இருந்து வைத்திய வீரராகவர் ஸ்ரீதேவி, பூ தேவி சமேதராக புறப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து குளக்கரையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளிய உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் வீற்றிருந்த வீரராகவருக்கு சிறப்பு பூஜை மற்றும் தீப ஆராதனை நடைபெற்றன.

    பின்னர் மின் அலங்காரம் செய்யப்பட்ட தெப்பக்குளத்தில் 3 முறை உலா வந்தார். கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
    Next Story
    ×