
முக்கிய விழா நாளான நேற்று முன்தினம் மாலையில் மதுக்குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சியும், இரவு 9.30 மணிக்கு மேல் கோவில் அருகே உள்ள திடலில் 11 அரிவாள்களை கொண்ட ஏணி மீது ஏறி நின்று சாமியாடி அருள்வாக்கு கூறி பக்தர்கள் மீது மலர் தூவும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நேற்று காலை பால்காவடி எடுத்து வந்து தீ மிதித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து தீ மிதித்து சாமி தரிசனம் செய்தனர்.