search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பல்லக்கு வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    X
    பல்லக்கு வாகனத்தில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    பிரம்மோற்சவ விழா: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர்

    திருப்பதி சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் இரவு கருடசேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    திருப்பதியை அடுத்த சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 5-வது நாளான நேற்று காலை பல்லக்கு சேவை நடந்தது.

    அதில் உற்சவர் கல்யாணவெங்கடேஸ்வரசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இரவு கருடசேவை நடந்தது. அதில் உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×