search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்ப உற்சவம்
    X
    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்ப உற்சவம்

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் தெப்ப உற்சவம்

    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நம்மாழ்வார் தெப்பத்திருவிழாவும், நாளை தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.
    ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் மாசித் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் விழாவில் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது. 9-ம் திருவிழாவான நேற்று முன்தினம் தேரோட்டம் நடைபெற்றது.

    10-ம் திருவிழாவான நேற்று தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

    பின்னர், 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.

    இரவு 7 மணிக்கு சுவாமி உற்சவர் பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் தெப்பத்தேரில் எழுந்தருளி, தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    11-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நம்மாழ்வார் தெப்பத்திருவிழாவும், நாளை தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.

    Next Story
    ×