
10-ம் திருவிழாவான நேற்று தெப்ப உற்சவத்தை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
பின்னர், 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு திருமஞ்சனம், தீபாராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
இரவு 7 மணிக்கு சுவாமி உற்சவர் பொலிந்து நின்ற பிரான் தாயார்களுடன் தெப்பத்தேரில் எழுந்தருளி, தெப்பத்தில் வலம் வந்து அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11-ம் திருவிழாவான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நம்மாழ்வார் தெப்பத்திருவிழாவும், நாளை தீர்த்தவாரியும் நடைபெறுகிறது.