என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
காரைக்கால் கைலாசநாதர் கோவில் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
Byமாலை மலர்22 Feb 2022 4:55 AM GMT (Updated: 22 Feb 2022 4:55 AM GMT)
காரைக்கால் கைலாசநாதர் கோவில் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவில் மார்ச் 9-ந் தேதி கொடியேற்றமும், 17-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
காரைக்கால் அம்மையார் கோவில் எதிரே சுந்தரம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கோவில் சிவாச்சாரியர்கள் பூர்வாங்க பூஜைகள் செய்தனர். பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து பந்தக்கால் கோவில் நுழைவு வாசலில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் வாரியத்தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவில் மார்ச் 9-ந் தேதி கொடியேற்றமும், 17-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. 20-ந் தேதி தொப்போற்சவமும், 21-ந் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் வாரியத்தினர் செய்து வருகிறார்கள்.
தொடர்ந்து பந்தக்கால் கோவில் நுழைவு வாசலில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் வாரியத்தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவில் மார்ச் 9-ந் தேதி கொடியேற்றமும், 17-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. 20-ந் தேதி தொப்போற்சவமும், 21-ந் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் வாரியத்தினர் செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X