search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    காரைக்கால் கைலாசநாதசுவாமி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.
    X
    காரைக்கால் கைலாசநாதசுவாமி கோவிலில் பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடந்தபோது எடுத்தபடம்.

    காரைக்கால் கைலாசநாதர் கோவில் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

    காரைக்கால் கைலாசநாதர் கோவில் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவில் மார்ச் 9-ந் தேதி கொடியேற்றமும், 17-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
    காரைக்கால் அம்மையார் கோவில் எதிரே சுந்தரம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கோவில் சிவாச்சாரியர்கள் பூர்வாங்க பூஜைகள் செய்தனர். பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பந்தக்கால் கோவில் நுழைவு வாசலில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் வாரியத்தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவில் மார்ச் 9-ந் தேதி கொடியேற்றமும், 17-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. 20-ந் தேதி தொப்போற்சவமும், 21-ந் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் வாரியத்தினர் செய்து வருகிறார்கள்.
    Next Story
    ×