
அதைத்தொடர்ந்து காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களான கல்யாணவெங்கடேஸ்வரசாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சரஸ்வதி அலங்காரத்தில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிம்ம வாகனச் சேவையும், இரவு முத்துப்பந்தல் வாகனச் சேவையும் நடக்கிறது.