என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வால்பாறை வாழைத்தோட்டம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம்
Byமாலை மலர்17 Feb 2022 5:37 AM GMT (Updated: 17 Feb 2022 5:37 AM GMT)
வால்பாறை வாழைத்தோட்டத்தில் உள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வால்பாறை வாழைத்தோட்டம் பகுதியில் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் 54-ஆம் ஆண்டு திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் 31-ந் தேதி காப்பு கட்டி நோன்பு சாத்தி விழா தொடங்கியது.
ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வந்தது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நெய் வேத்திய பூஜை, கொடிமர பூஜை ஆகிய பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தெய்வ குல காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு பிரசித்திபெற்ற கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து ஸ்ரீகாமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, நடுமலை ஆற்றில் கும்பஸ்தாபனம் செய்யப்பட்டது.
நேற்று புதன்கிழமை ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டு, பொங்கல் வைத்தும் வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து வால்பாறை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து யானை சிலை ஊர்வலத்துடன் ஏகாம்பர ஈஸ்வரரை மாப்பிள்ளையாக அழைத்து வந்து ஸ்ரீகாமாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீகாமாட்சியம்மன் திருவீதிஉலா வந்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு நாளும் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்று வந்தது. காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், நெய் வேத்திய பூஜை, கொடிமர பூஜை ஆகிய பூஜைகள் நடத்தப்பட்டு வந்தது. மேலும் தெய்வ குல காளியம்மன் கோவில் உள்பட பல்வேறு பிரசித்திபெற்ற கோவில்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வந்து ஸ்ரீகாமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, நடுமலை ஆற்றில் கும்பஸ்தாபனம் செய்யப்பட்டது.
நேற்று புதன்கிழமை ஸ்ரீ காமாட்சியம்மனுக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள் நடத்தப்பட்டு, பொங்கல் வைத்தும் வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து வால்பாறை ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவிலில் இருந்து யானை சிலை ஊர்வலத்துடன் ஏகாம்பர ஈஸ்வரரை மாப்பிள்ளையாக அழைத்து வந்து ஸ்ரீகாமாட்சியம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் ஸ்ரீகாமாட்சியம்மன் திருவீதிஉலா வந்தார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X