search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில்
    X
    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவில்

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உற்சவம் ரத்து

    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் காரணமாக தீர்த்தவாரி உற்சவம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக கோவில் நிர்வாகம் கூறி இருப்பதாவது:-

    மாமல்லபுரத்தில் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக விளங்கும் தலசயன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் பவுர்ணமியையொட்டி புஷ்கரணி தீர்த்த குளத்தில் தெப்பல் உற்சவம் மற்றும் தலசயன பெருமாள், வராக பெருமாள் கருட வாகனத்தில் அமர்ந்து கடற்கரையில் எழுந்தருளதல், கடலில் தீர்த்தவாரி உற்சவம் ஆகியவை நடைபெறுவது வழக்கம்.

    தற்போது தலசயன பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிகளுக்காக பாலாலயம் செய்யப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இதன் காரணமாக இந்த ஆண்டு தெப்பல் உற்சவம் மற்றும் தீர்த்தவாரி உற்சவங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு கோவில் நிர்வாகம் செய்துள்ளது.
    Next Story
    ×