search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தெப்ப திருவிழா நிறைவு திருப்பரங்குன்றம் கோவிலில் சூரசம்ஹார லீலை
    X
    தெப்ப திருவிழா நிறைவு திருப்பரங்குன்றம் கோவிலில் சூரசம்ஹார லீலை

    தெப்ப திருவிழா நிறைவு திருப்பரங்குன்றம் கோவிலில் சூரசம்ஹார லீலை

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்பத் திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 1-ந்தேதி தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவையொட்டி கடந்த 9 நாட்களாக தினமும் காலையிலும் இரவிலுமாக உற்சவர் சன்னதியில் இருந்து திருவாச்சி மண்டபத்திற்கு தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி பல்வேறு விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    கொரோனா வைரஸ் பரவலால் திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தெப்ப உற்சவம் தவிர்க்கப்பட்டது. இதே சமயம் திருவிழாவின் விசேஷ நிகழ்ச்சியாக சூரசம்ஹார லீலை கோவிலுக்குள் உள்ள திருவாச்சி மண்டபத்தில் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    Next Story
    ×