என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள், தேவியர்கள்.
    X
    திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள், தேவியர்கள்.

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தெப்பத்திருவிழா 6-ந்தேதி தொடங்குகிறது

    திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் தெப்ப திருவிழா வருகிற 6-ந்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடக்கிறது.
    திருக்கோஷ்டியூரில் புகழ்பெற்ற சவுமியநாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா வருகிற 6-ந்தேதி மாலை 6 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. மறுநாள்(7-ந்தேதி) காலை 7 மணிக்கு சுவாமி கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடக்கிறது. அதன்பின்னர் காலை 9.18 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.

    திருவிழா 10 நாட்கள் நடக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடக்கிறது.

    வருகிற 12-ந்தேதி ஆண்டாள் சன்னதியில் மாலை மாற்றுதல் வைபவமும், 13-ந்தேதி மாலை சூர்ணாபிஷேகமும் தங்கத் தோளிக்கினியானில் சுவாமி திருவீதி புறப்பாடும் தெப்பக்குளத்தில் முகூர்த்தக்கால் நடுதல் விழாவும் நடைபெறுகிறது.

    14-ந்தேதி அரண்மனை மண்டகப்படியும், குதிரை வாகன புறப்பாடும், 15-ந்தேதி வெண்ணெய்த்தாழி சேவையும், பகல் 10.50 மணிக்கு தெப்பம் முட்டுத்தள்ளுதல் வைபவமும், 16-ந்தேதி தெப்பத்திருநாளன்று காலை 11.15 மணிக்கு பகல் தெப்பமும் இரவு 9 மணிக்கு தெப்பம் கண்டருளல் வைபவமும் நடைபெற உள்ளது. 17-ந்தேதி தீர்த்தவாரி வைபவமும் நடக்கிறது.

    தெப்பத்திருவிழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகநாச்சியார், தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சேவற்கொடியோன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×