என் மலர்
வழிபாடு

தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்கும் காட்சி.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருப்பரங்குன்றம் கோவிலில் தெப்பத்திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளி வலம்வருதல் நடக்கிறது.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் தெப்பத் திருவிழாவும் விசேஷமானதாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான தெப்ப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரை 10 நாட்களில் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 10.15 மணிஅளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதனையடுத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகாதீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதைதொடர்ந்து கொடிகம்பத்திற்கு புனித நீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து 10.45 மணிஅளவில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. மேலும் தர்ப்பைப்புல், மா இலை, பட்டு வஸ்திரங்கள் கொண்டு கொடிகம்பம் அலங்கரிக்கப்பட்டது.
இதனையடுத்து கொடிகம்ப உயரத்திற்கு பூமாலைகள் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதைக்கண்டு அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளி வலம்வருதல் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி தைகார்த்திகை தினமாகும். கொரோனா காரணமாக நகர் வீதிகளில் சாமி புறப்பாடு, தெப்ப முட்டு தள்ளுதல், தேரோட்டம், சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு உள்ளன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் காலை மற்றும் இரவில் மின்னொளியில் சாமி எழுந்தருளக்கூடிய தெப்பத்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டிற்கான தெப்ப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா தொடர்ந்து வருகிற 10-ந்தேதி வரை 10 நாட்களில் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 10.15 மணிஅளவில் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு விசேஷ பூஜையும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.
இதனையடுத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் மகாதீபாராதனை நடந்தது. இதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார்.
இதைதொடர்ந்து கொடிகம்பத்திற்கு புனித நீர், இளநீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்கள் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதனையடுத்து 10.45 மணிஅளவில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றப்பட்டது. மேலும் தர்ப்பைப்புல், மா இலை, பட்டு வஸ்திரங்கள் கொண்டு கொடிகம்பம் அலங்கரிக்கப்பட்டது.
இதனையடுத்து கொடிகம்ப உயரத்திற்கு பூமாலைகள் அணிவிக்கப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அதைக்கண்டு அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவில் உற்சவர் சன்னதியில் இருந்து சாமி புறப்பட்டு கோவிலுக்குள் உள்ள திருவாட்சி மண்டபத்தில் எழுந்தருளி வலம்வருதல் நடக்கிறது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 9-ந்தேதி தைகார்த்திகை தினமாகும். கொரோனா காரணமாக நகர் வீதிகளில் சாமி புறப்பாடு, தெப்ப முட்டு தள்ளுதல், தேரோட்டம், சூரசம்ஹாரம் நிகழ்ச்சிகள் தவிர்க்கப்பட்டு உள்ளன. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஜி.எஸ்.டி. ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் காலை மற்றும் இரவில் மின்னொளியில் சாமி எழுந்தருளக்கூடிய தெப்பத்திருவிழாவும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story






