என் மலர்tooltip icon

    வழிபாடு

    கன்னியாகுமரி கடலில் இன்று காலை புனித நீராடியவர்களை படத்தில் காணலாம்.
    X
    கன்னியாகுமரி கடலில் இன்று காலை புனித நீராடியவர்களை படத்தில் காணலாம்.

    இன்று தை அமாவாசை: கன்னியாகுமரி கடலில் புனித நீராடிய பக்தர்கள்

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை.
    இந்துக்களின் முக்கிய விசே‌ஷ நாட்களில் ஆடிஅமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற வைமுக்கியமானது ஆகும். இந்தவிஷேசநாட்களில் இந்துக்கள்அதிகாலையிலேயேஎழுந்து கடல், நதி, ஆறு போன்ற புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்து தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். குறிப்பாக இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துஉள்ள புண்ணிய ஸ்தலமான கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற விசே‌ஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கினால் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற விசே‌ஷ நாட்களில் பக்தர்கள் கன்னியாகுமரி கடலில் புனித நீராட அனுமதிக்கப்படவில்லை. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஆடி அமாவாசை, தைஅமாவாசை, மற்றும் மகாளயஅமாவாசை போன்ற விஷேச நாட்களில் இந்துக்கள்ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் நீராடி தங்களதுமுன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா தாக்கம் குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கன்னியா குமரி கடற்கரைக்கு நேற்று முதல் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளது. கடலில் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் தை அமாவாசையான இன்று கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக் கப்பட்டது. இதனால் தை அமாவாசையான இன்று அதிகாலையில்இருந்தே கன்னியாகுமரி கடலில் புனித நீராட பக்தர்கள் வந்து குவிந்த வண்ணமாக இருந்தனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணிச ங்கமம்பகுதியில்உள்ள கடலில் இன்று அதிகாலை 4 மணியில் இருந்து பக்தர்கள் புனித நீராட தொடங்கினார்கள். இதில்திரளான பக்தர்கள் கடலில் நீராடிவிட்டு வந்து கடற்கரையில்உள்ள 16 கால் மண்டபத்தை சுற்றி அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதமந்திரம் ஓதுவார்களிடம் தங்களது முன்னோர்களை நினைத்து பலி கர்ம பூஜை செய்தார்கள்.

    அவ்வாறு பூஜை செய்த பச்சரிசி, எள்ளு, பூக்கள் மற்றும் தர்ப்பை புல் போன்றவற்றை ஒரு வாழை இலையில் வைத்து தலையில் சுமந்துகொண்டு சென்று கடலில் போட்டுவிட்டு மீண்டும்கடலில் நீராடி தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்தார்கள். பின்னர் கடற்கரையில்உள்ள பரசுராமர் விநாயகர் கோவில், பகவதி அம்மன் கோவில், சன்னதி தெருவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ரெயில்நிலையசந்திப்பில் உள்ள குகநாதீஸ்வரர் கோவில் மற்றும் விவேகானந்தபுரத்தில் உள்ளசர்க்கரதீர்த்த காசிவிசாலாட்சிசமேத காசிவிஸ்வநாதர் கோவில் ஆகியகோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்கள். இதனால் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்பட்டது. தை அமாவாசையை யொட்டிஇந்த கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் விசே‌ஷ பூஜைகள் நடந்தது.கொரோனாவிதிமுறைகளுக்குஉட்பட்டு பக்தர்கள்கோவில்களுக்கு சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சென்றுவழிபட்டனர்.

    தை அமாவாசையை யொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது. கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுஇருந்தனர்.
    Next Story
    ×