search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருச்செந்தூர் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்தவர்களை படத்தில் காணலாம்.
    X
    திருச்செந்தூர் கடற்கரையில் தர்ப்பணம் கொடுத்தவர்களை படத்தில் காணலாம்.

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இன்று தை அமாவாசையையொட்டி ஆறுகள், கடற்கரைகள், கோவில் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டனர்.
    ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று தங்களது முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் செய்வார்கள்.

    அமாவாசை நாட்களில் புனித தீர்த்த தலங்களுக்கு சென்று எள்ளும், தண்ணீரும் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்த்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசிகளும் நமக்குக் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    இன்று தை அமாவாசையையொட்டி ஆறுகள், கடற்கரைகள், கோவில் படித்துறைகள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் அதிகாலையிலேயே திரண்டனர்.

    நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களிலும் ஏராள மான பொதுமக்கள் நீர் நிலை களில் திரண்டு தர்ப்பணம் கொடுத் தனர். இதனால் கோவில் படித்துறைகள், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

    நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் படித்துறையில் வழக்கமாக பொதுமக்கள் ஆடி, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுப்பார்கள். ஆனால் இந்த முறை அங்கு அனுமதி வழஙக்கப்படவில்லை. இதனால் அதன் பின்புறம் உள்ள அய்யா கோவில் முன்பு அனுமதி வழங்கப்பட்டது.

    இன்று காலை முதலே பாபநாசம் அய்யா கோவில் முன்பு இருந்து ஆரம்பித்து தாமிரபரணி ஆற்றங்கரை யோரம் கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி, டவுன் குறுக்குத்துறை, வண்ணார் பேட்டை பேராட்சி அம்மன் கோவில், ஏரல், புன்னக் காயல் வரை மொத்தம் உள்ள 64 தீர்த்த கட்டங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

    டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங் கரையில் இன்று அதிகாலை முதலே பொதுமக்கள் மோட் டார் சைக்கிள்கள், கார்களில் குடும்பம் குடும்பமாக வந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

    இதன் காரணமாக குறுக்குத்துறை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிக அளவில் பொதுமக்கள் திரண்ட தால் நீண்ட வரிசை யில் காத்திருந்து தர்ப்பணம் கொடுத்து சென்றனர்.

    அங்கு எள், வாழைப்பழம் உள்ளிட்டவை வழங்கப் பட்டது. பூஜைகள் செய்தபின்னர் தாமிரபரணி ஆற்றில் இறங்கி எள்ளை நீரில் கரைத்துவிட்டு குளித்தனர். சிவனடியார்கள் திரண்டு சங்கொலி எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே தர்ப்பணம் கொடுக்க திரண்டனர். சமூக இடைவெளியுடன் அவர்கள் நின்று தர்ப்பணம் கொடுத்தனர்.

    மாநகர பகுதியில் தெர்மல் நகர் கடற்கரையிலும், அதனை சுற்றி உள்ள கடற்கரைகளிலும் பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து சென்றனர். கடலில் குளித்து வழிபாடு நடத்தினர்.

    ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவிலையொட்டி தாமிரபரணி ஆற்றங்கரையிலும் பொதுமக்கள் கார்களில் காலை முதல் திரண்டு தர்ப்பணம் செய்தனர்.

    எள்ளும், நீரும் இறைத்து வழிபட்டனர். தொடர்ந்து ஆற்றில் குளித்துவிட்டு அருணாசல சுவாமி கோவிலில் சுவாமி கும்பிட்டு சென்றனர். இதேபோல் பழைய காயல் சங்குதுவாரம் பகுதியிலும் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையும் விதமாக பொதுமக்கள் தர்ப் பணம் கொடுத்து சென்றனர்.

    தென்காசி மாவட்டத் திலும் குற்றாலம் மெயினருவி பகுதியில் பொதுமக்கள் காலையிலேயே திரண்டு அருவிக்கரைகளில் வைத்து தர்ப்பணம் கொடுத்துவிட்டு அருவிகளில் குளித்து சென்றனர். பின்னர் குற்றால நாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வீடு திரும்பினர்.

    இதேபோல் பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட பிற நீர்நிலைகளிலும் பொதுமக்கள் இன்று தர்ப்பணம் செய்தனர்.
    Next Story
    ×