என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வெயிலுகந்தம்மன் கோவில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Byமாலை மலர்27 Jan 2022 7:17 AM GMT (Updated: 27 Jan 2022 7:17 AM GMT)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உபகோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் இணைந்த உப கோவிலான வெயிலுகந்தம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்தாண்டு மாசித் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. காலை 6.45 மணிக்கு மேளதாளங்கள் முழங்க முத்துராமன் வல்லவராயர் மாசித்திருவிழா கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமரம் தர்ப்பைப்புல், வண்ண மலர்கள் மற்றும் பட்டாடைகளால் அலங்கரிக்கப்பட்டது. காலை 7.30 மணிக்கு கொடி மரத்திற்கு மகா தீபாராதனை நடந்தது.
நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் பணியாளர்கள் பிச்சையா, மணியம் பாஸ்கர், நாகராஜன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி தினசரி அம்மன் உலா கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
நிகழ்ச்சியில், கோவில் தக்கார் பிரதிநிதியும், ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், கோவில் பணியாளர்கள் பிச்சையா, மணியம் பாஸ்கர், நாகராஜன் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளின் படி தினசரி அம்மன் உலா கோவில் உள்பிரகாரத்தில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் (பொறுப்பு) குமரதுரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X