
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் கொரோனா பரவல் கட்டுப்பாடுகளால் கோவில் வளாகத்திலேயே ஆகம விதிகள் படி தண்ணீர் நிரம்பிய கொப்பரையில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. இதில் சிவசுப்பிரமணிய சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிக்க சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.
இதில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் செங்குந்தர் சமூகத்தினர் செய்திருந்தனர்.