search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முருகனிடம் திருஊடல் நடத்திய தெய்வானை
    X
    முருகனிடம் திருஊடல் நடத்திய தெய்வானை

    முருகனிடம் திருஊடல் நடத்திய தெய்வானை

    தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தைப்பூச நிறைவு நாளான நேற்று முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் புதுச்சேரி சப்பரத்தில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது தான் ஏற்கனவே இருக்க, வள்ளியை திருமணம் செய்தது ஏன்? என்று முருகப்பெருமானிடம் கோபித்த தெய்வானை அம்மன் சப்பரத்தில் இருந்து இறங்கி தனி பல்லக்கில் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு சென்று நடையை சாத்தி கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து தெய்வானை அம்மனை சமரசம் செய்யும் ஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வீரபாகுதேவராக ஓதுவார் 3 முறை தூது சென்று ஊடல் பாடல்களை பாடினார். அப்போது வள்ளியும், தெய்வானையும் ஒருவரே, என்று விளக்கி சமரசம் செய்தார். அதன்பின்னர் கோவில் நடை திறந்து, தெய்வானை அம்மனுடன் முத்துக்குமாரசுவாமி சேர்ந்து கொள்வதுமான நிகழ்ச்சி நடந்தது. பின்னர் உட்பிரகாரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை காட்டப்பட்டது.
    Next Story
    ×