search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பவானி கூடுதுறை
    X
    பவானி கூடுதுறை

    பவானி கூடுதுறையில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் திதி கொடுக்க அனுமதி

    ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டு்ம். சமூக இடைவெளிவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்.
    தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் பரிகாரம், தர்ப்பணம் செய்ய ஏராளமானோர் வருவார்கள். இவர்களும் வாரத்தில் கோவில்கள் மூடப்படும் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் பரிகாரம் செய்ய தடை விதிக்கப்பட்டு்ள்ளது.

    மற்ற 4 நாட்கள் மட்டுமே பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அப்போது பக்தர்கள் கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டு்ம். சமூக இடைவெளிவிட்டு பரிகாரம் செய்ய வேண்டும்.

    குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்று பவானி கூடுதுறைக்கு பரிகாரம் செய்ய குறைவானவர்களே வந்திருந்தனர். இதனால் பவானி கூடுதுறை பரிகார மண்டபம் வெறிச்சோடி கிடந்தது.
    Next Story
    ×