என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
Byமாலை மலர்12 Jan 2022 8:36 AM GMT (Updated: 12 Jan 2022 8:36 AM GMT)
பெருமாள் கோவில்களில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நாளை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பெருமாள் கோவில்களில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் வைகுண்ட ஏகாதசியும் ஒன்று. வைகுண்ட ஏகாதசி விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் கார்த்திகை மாத இறுதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளது.
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலையில் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை. நாளை காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல் மற்ற கோவில்களில் கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
தமிழகத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடக்க உள்ளது.
பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. அனைத்து பெருமாள் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி அதிகாலையில் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகிறது.
அதைத்தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இந்த சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இதனால் திரளான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று இரவு 10.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பக்தர்கள் திருக்கோயிலின் உள்ளே செல்ல அனுமதி இல்லை. நாளை காலை 6.15 மணிக்கு மேல் இரவு 8.00 மணி வரை அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல் மற்ற கோவில்களில் கொரோனா நோய் தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X