search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    புத்தாண்டை முன்னிட்டு தங்க கவசத்தில் அருள்பாலித்த மேச்சேரி பத்ரகாளியம்மன்
    X
    புத்தாண்டை முன்னிட்டு தங்க கவசத்தில் அருள்பாலித்த மேச்சேரி பத்ரகாளியம்மன்

    புத்தாண்டை முன்னிட்டு தங்க கவசத்தில் அருள்பாலித்த மேச்சேரி பத்ரகாளியம்மன்

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டது.
    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் புத்தாண்டு தினமான இன்று சாமி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். மேலும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டது.

    இதேபோன்று மேட்டூரில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயம், ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் பெருமாள் கோவில், மேட்டூர் அணைக்கட்டு முனியப்பன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சாமிக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். அனைத்து கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×