search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆஞ்சநேயர்
    X
    ஆஞ்சநேயர்

    காளிப்பட்டி வீரபக்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா 2-ந்தேதி நடக்கிறது

    நாமக்கல் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வீரபக்த ஆஞ்சநேயர் சாமிகோவிலில் வருகிற 2-ந் தேதி அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.
    நாமக்கல் மாவட்டம் காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது வீரபக்த ஆஞ்சநேயர் சாமி. இந்த கோவிலில் வருகிற 2-ந் தேதி அமாவாசை நாளன்று அனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.

    அன்று காலை 7.30 மணி முதல் 10 மணிக்குள் மூல நட்சத்திரத்தில் சாமிக்கு அபிஷேக ஆராதனை, பூஜை, சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் உற்சவர் அனுமன் திருவீதி உலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், வீரபக்த ஆஞ்சநேயர் பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×