search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவிளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.
    X
    திருவிளக்கு பூஜை நடைபெற்ற போது எடுத்த படம்.

    மார்கழி மாதத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு- திருவிளக்கு பூஜை

    மார்கழி மாதத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஐப்பனை வழிபட்டனர்.
    முசிறி ஐயப்பன் கோவிலில் 45-ம் ஆண்டாக திருவிளக்கு வழிபாடு, அய்யப்பன் பஜனை மற்றும் பம்பா தீபத்தேரை காவிரி ஆற்றில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைமை குருசாமிகள் ஜெயபாலன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அயப்பனை வழிபட்டனர்.

    தொட்டியம் கடைவீதியில் அமைந்துள்ள பகவதிஅம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் குட்டி குடித்தல் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் மாரியாயி கும்பிடும் நிகழ்ச்சி கடந்த 24-ந் தேதி ஊர்சாற்றுமுறையுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாரியாயி கும்பிடும் நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது தொட்டியம் பகுதிக்கு உட்பட்ட பக்தர்கள் மாவிளக்கு எடுத்து வந்து அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    இதேபோல தொட்டியம் மதுரா நகரில் அமைந்துள்ள ஐயப்பன் ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. விழாவில் காலை அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், இரவு உற்சவர் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் புறப்பாடும் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், மண்டல பூஜை விழா குழுவினரும் செய்து இருந்தனர்.

    திருச்சி நவல்பட்டை அடுத்த போலீஸ் காலனி ஞான விநாயகர் கோவிலில் உள்ள அய்யப்பனுக்கு நேற்று மண்டல அபிஷேக பூஜையை முன்னிட்டு உற்சவமூர்த்தியின் திருவீதி உலா நடைபெற்றது.
    Next Story
    ×