search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மரகத நடராஜர் சிலையில் நாளை சந்தனம் களையப்படுகிறது(பழைய படம்)
    X
    மரகத நடராஜர் சிலையில் நாளை சந்தனம் களையப்படுகிறது(பழைய படம்)

    திருஉத்தரகோசமங்கை கோவிலில் மரகத நடராஜர் சிலையில் நாளை சந்தனம் களையப்படுகிறது

    திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மரகத நடராஜர் சிலைக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் சந்தனம் களையும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    ராமநாதபுரம் அருகே பூலோகத்தில் தோன்றிய முதல் கோவிலாகவும், புண்ணியதலங்களில் ஒன்றாகவும் திருஉத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர், மங்களநாயகி கோவில் விளங்குகிறது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் ஆடும் திருக்கோலத்திலான அபூர்வ பச்சை மரகத நடராஜர் சிலை உள்ளது.

    இந்த மரகத சிலை ஒலி, ஒளி அதிர்வுகளால் பாதிக்காத வண்ணம் பாதுகாக்க ஆண்டு முழுவதும் சிலை மீது சந்தனகாப்பு பூசப்பட்டிருக்கும். வருடத்தில் ஒருநாள் ஆருத்ரா தரிசனத்திற்கு முதல் நாள் சந்தனகாப்பு களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும்.

    இதன்படி கடந்த 10 -ந் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் மரகத நடராஜர் மீது பூசப்பட்டிருந்த சந்தனகாப்பு களையும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்வாக தொடர்ந்து பல்வேறு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று அன்று இரவு 11 மணிக்கு மேல் ஆருத்ரா மகா அபிஷேகம் தொடங்கி மறுநாள் (20-ந்தேதி) அதிகாலை அருணோதய காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்னதாக மீண்டும் நடராஜர் மீது சந்தனகாப்பு பூசப்படும்.

    இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டதலின்படி உரிய கட்டுப்பாடுகளுடன் விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வெளியூர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களை சார்ந்தவர்கள் திருஉத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசன விழாவிற்கு வருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
    Next Story
    ×