என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
X
சிவனுக்கு பிடித்த திருவெம்பாவை
Byமாலை மலர்16 Dec 2021 8:47 AM GMT (Updated: 16 Dec 2021 8:47 AM GMT)
கன்னிப் பெண்கள் மார்கழி அதிகாலையில் தங்கள் தோழிகளை எழுப்பி குளித்து விட்டு சிவவழிபாட்டுக்கு செல்வதாக திருவெம்பாவை பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
மார்கழி மாதம் சிவன் கோவில்களில் திருவெம்பாவை பாடப்படுகிறது. திருவெம்பாவை 20 பாடல்கள் கொண்டது. இதைத் தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சியில் உள்ள 10 பாடல்கள் பாடப்படுகிறது.
திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி இரண்டையும் 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் இயற்றினார். திருவெம்பாவையை அவர் இயற்றி அருளிய இடம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கிறது. கன்னிப் பெண்கள் மார்கழி அதிகாலையில் தங்கள் தோழிகளை எழுப்பி குளித்து விட்டு சிவவழிபாட்டுக்கு செல்வதாக திருவெம்பாவை பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கள்
மாதே! வளருதியோ?
-என்ற திருவெம்பாவையின் முதல் பாடலிலேயே தோழிகள் துயில் எழுப்பப்படுவதை காண லாம். திருவாசகத்தில் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்றாக திருவெம்பாவை கருதப்படுகிறது. மோட்ச நிலைக்கு செல்ல விரும்பு பவர்கள் திருவெம்பாவை பாடல்கள் மூலம் வேண்டு கிறார்கள். மார்கழி மாதம் வீட்டில் திருவெம்பாவை படித்தால் திருமண தடைகள் விலகும்.
மார்கழி மாதம் அதிகாலையில் பனி பெய்யும். கடும் குளிர் இருக்கும். அதுவும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரம் என்று கூறப்படும் அதிகாலை 3 மணி முதல் 5.45 மணி வரை ‘ஜில்’லென்று இருக்கும். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் தான் பரிசுத்தமான பஞ்சுபூத வாயுசக்தி நிறைந்த நேரமாகும். (இப்போது ஓசோன் சக்தி என்கிறார்கள்) பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாள், நட்சத்திரம் பார்க்காமல் நல்ல காரியங்கள் செய்யலாம்.
வியாழக்கிழமைகளில் மஞ்சள் பூ, அட்சதை கொண்டு சிவனை அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டால் சுப பலன்கள் கிடைக்கும். நல்ல ஞானம், செல்வ சேர்க்கை உண்டாகும். மார்கழி மாதம் பொதுவாக மனிதர்களின் ரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் அறியாமலே சோம்பல் வந்து விடும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிர்ந்த நீரில் நீராடி, நடந்து விட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். நரம்புகள் தூண்டப்பட்டு உடல் புத்துணர்ச்சி பெறும். அனைத்துக்கும் மேலாக மனம் குழப்பத்தில் இருந்து அமைதி பெறும். அதுபோல மாலை 4 மணி முதல் 5.45 மணி வரையிலான நேரத்தை “கோதூவி” என்கிறார்கள். இந்த சமயத்தில் சூரிய அஸ்தமனத்தை பார்த்து விட்டு சிவனை வணங் கினால் அளவிடற் கரிய பலன்கள் கிடைக்கும்.
திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி இரண்டையும் 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மாணிக்கவாசகர் இயற்றினார். திருவெம்பாவையை அவர் இயற்றி அருளிய இடம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கிறது. கன்னிப் பெண்கள் மார்கழி அதிகாலையில் தங்கள் தோழிகளை எழுப்பி குளித்து விட்டு சிவவழிபாட்டுக்கு செல்வதாக திருவெம்பாவை பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை
யாம் பாடக் கேட்டேயும் வாள் தடங்கள்
மாதே! வளருதியோ?
-என்ற திருவெம்பாவையின் முதல் பாடலிலேயே தோழிகள் துயில் எழுப்பப்படுவதை காண லாம். திருவாசகத்தில் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்றாக திருவெம்பாவை கருதப்படுகிறது. மோட்ச நிலைக்கு செல்ல விரும்பு பவர்கள் திருவெம்பாவை பாடல்கள் மூலம் வேண்டு கிறார்கள். மார்கழி மாதம் வீட்டில் திருவெம்பாவை படித்தால் திருமண தடைகள் விலகும்.
மார்கழி மாதம் அதிகாலையில் பனி பெய்யும். கடும் குளிர் இருக்கும். அதுவும் குறிப்பாக பிரம்ம முகூர்த்த நேரம் என்று கூறப்படும் அதிகாலை 3 மணி முதல் 5.45 மணி வரை ‘ஜில்’லென்று இருக்கும். இந்த பிரம்ம முகூர்த்த நேரம் தான் பரிசுத்தமான பஞ்சுபூத வாயுசக்தி நிறைந்த நேரமாகும். (இப்போது ஓசோன் சக்தி என்கிறார்கள்) பிரம்ம முகூர்த்த நேரத்தில் நாள், நட்சத்திரம் பார்க்காமல் நல்ல காரியங்கள் செய்யலாம்.
வியாழக்கிழமைகளில் மஞ்சள் பூ, அட்சதை கொண்டு சிவனை அஷ்டோத்திரம் சொல்லி வழிபட்டால் சுப பலன்கள் கிடைக்கும். நல்ல ஞானம், செல்வ சேர்க்கை உண்டாகும். மார்கழி மாதம் பொதுவாக மனிதர்களின் ரத்த ஓட்டத்தில் மாறுபாடு ஏற்படும். இதனால் அறியாமலே சோம்பல் வந்து விடும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் குளிர்ந்த நீரில் நீராடி, நடந்து விட்டு வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். நரம்புகள் தூண்டப்பட்டு உடல் புத்துணர்ச்சி பெறும். அனைத்துக்கும் மேலாக மனம் குழப்பத்தில் இருந்து அமைதி பெறும். அதுபோல மாலை 4 மணி முதல் 5.45 மணி வரையிலான நேரத்தை “கோதூவி” என்கிறார்கள். இந்த சமயத்தில் சூரிய அஸ்தமனத்தை பார்த்து விட்டு சிவனை வணங் கினால் அளவிடற் கரிய பலன்கள் கிடைக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X