search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஐயப்பன்
    X
    ஐயப்பன்

    சுவாமி ஐயப்பன் பயோடேட்டா

    சபரிமலைக்கு மாலை அணிஞ்சு போறதுல எவ்வளவோ சிறப்பான அம்சங்கள் இருக்கு. மாலை போட்டு விரதமிருக்கும்போது நம்மை நாமே சுயபரிசோதனை செஞ்சுப் பார்த்துக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கு.
    1. திருநாமங்கள் - அரிஹரசுதன், சாஸ்தா, மணிகண்டன், மாசாத்தான், கண்டன் சாத்தன், சாத்தப்பன், ஐயனார்
    2. கேரளத்தில் திரு அவதாரம் செய்தது - கொல்லம் ஆண்டு 79 (கி.பி.803)
    3. பெற்றோர் - சிவன்-மோகினி உருக்கொண்ட திருமால்
    4. பிறந்தநாள் - மார்கழி மாதம், சனிக்கிழமை, பஞ்சமி திதி, உத்திர நட்சத்திரம், விருச்சிக லக்னம் கூடிய சுபதினம்.
    5. சகோதரர்கள் - கணபதி, கந்தன், ராஜராஜன் (பந்தள மன்னரின்மகன்)
    6. மூலமூர்த்தி - பூரணை- புஷ்கலை
    7. திருக்குமாரர் - சத்யகன் (சிவனின் ஒரே பேரன்)
    8. நிலவுலக அவதாரம்    பெற்றோர் - ஜெயந்தன்- பந்தன அரசகுமாரி
    9. அவதார நோக்கம் - மகிஷிவதம்
    10. திருநாமம் - மணிகண்டன்
    11. வளர்ப்பு தந்தை - பந்தள மன்னன்- ராஜசேகரன்
    12. நண்பர் - வாபரர் (இஸ்லாமியர்)
    13. விரும்பி உறைவது - சபரி பீடம்
    14. பிற ஆலயங்கள் - அச்சன்கோவில், ஆரியங்கா, எருமேலி, காந்தலை
    15. உடன் பிறந்தோர் - விநாயகர், முருகன், பந்தன மன்னன் குமாரன்
    16. பிடித்தது - தெய்த்தேங்காய், இருமுடி
    17. விரும்புவது - சரணகோஷம்
    18. சிறந்த திருநாள் - மகரஜோதி, தை முதல்நாள்
    19. திருக்கோலம் - யோக நிலை
    20. திருக்கரங்கள் - இரண்டு மட்டுமே
    21. ஆயுதங்கள் - ஏதும் இல்லை
    22. ஆற்றல் - திருமாலின் காத்தல், சிவனின் அழித்தல்
    23. அவதார பலன் - சைவ வைணவ ஒற்றுமை
    24. அருளிப்பாடு - மன்னித்து வாழ்விப்பது
    Next Story
    ×