search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    2 ஆண்டுகளுக்கு பிறகு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்
    X
    2 ஆண்டுகளுக்கு பிறகு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்

    2 ஆண்டுகளுக்கு பிறகு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நாமக்கல் ஆஞ்சநேயர்

    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. அந்த வகையில் நேற்று கார்த்திகை மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

    இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் சாமி துளசி மாலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர்.

    தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து சுமார் 2 ஆண்டுக்கு பிறகு நாமக்கல் ஆஞ்சநேயர் வெண்ணைகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக இவர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கிருமிநாசினி திரவம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×