search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    அருணாசலேஸ்வரர் கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.
    X
    அருணாசலேஸ்வரர் கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர், சந்திரசேகரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய காட்சி.

    தீபத் திருவிழா 5-ம் நாள்: அருணாசலேஸ்வரர் கோவிலில் விநாயகர், சந்திரசேகரர் உலா

    அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் கூடிய சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று 5-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கோவிலில் 3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் விநாயகர் மற்றும் அம்பாளுடன் கூடிய சந்திரசேகரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விநாயகரும், சந்திரசேகரரும் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் வலம் வந்து அருணாசலேஸ்வரர் சன்னதி முன்பு எழுந்தருளினர். பின்னர் அங்கிருந்து 5-ம் பிரகாரத்திற்கு கொண்டு வரப்பட்டு தயார் நிலையில் இருந்த வாகனங்களில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அப்போது சாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கோவில் 5-ம் பிரகாரத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் உலா நடைபெற்றது. பின்னர் இரவு சுமார் 9 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகள் உலா நடைபெற்றது.

    அப்போது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாமி உலா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    Next Story
    ×