என் மலர்
ஆன்மிகம்

முருகன்
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா 4-ந்தேதி தொடங்குகிறது
கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் கந்த சஷ்டி விழா நாட்களில் கவுசிக பாலசுப்ரமணியருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.
புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவிலில் 69-ம் ஆண்டு கந்த சஷ்டி விழா வருகிற 4-ந்தேதி மாலை விநாயகர் பூஜையுடன் தொடங்குகிறது. 23-ந்தேதி வரை விழா நடைபெறுகிறது. விழா நாட்களில் காலை, மாலையில் கவுசிக பாலசுப்ரமணியருக்கும், வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 10-ந் தேதியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாணமும், 15-ந்தேதி தெப்ப உற்சவமும், 23-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 10-ந் தேதியும், 11-ந்தேதி இரவு திருக்கல்யாணமும், 15-ந்தேதி தெப்ப உற்சவமும், 23-ந்தேதி ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Next Story






