என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
முன்னுதித்த நங்கை அம்மன் சிலைக்கு சுசீந்திரத்தில் வரவேற்பு
Byமாலை மலர்21 Oct 2021 7:52 AM GMT (Updated: 21 Oct 2021 7:52 AM GMT)
திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி விழாவிற்கு சென்று திரும்பிய முன்னுதித்த நங்கை அம்மன் சிலைக்கு சுசீந்திரத்தில் தமிழக போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சாமி சிலைகள் ஆண்டுதோறும் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நவராத்திரி விழா கடந்த 6-ந் தேதி தொடங்கி 15-ந் தேதி வரை நடந்தது.
இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சாமி சிலைகள் கடந்த 3-ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றன. நவராத்திரி விழா முடிந்ததும் 17-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன.
நேற்று முன்தினம் பத்மநாபபுரம் அரண்மனை முன்பு வந்த போது சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் சிலையும் குமாரசாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணிக்கு சுசீந்திரம் வந்தடைந்தது. அங்கு அம்மன் சிலைக்கு, நவராத்திரி குழு தலைவர் வீரபத்ர பிள்ளை மற்றும் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் சார்பில் 4 ரத வீதிகள் வழியாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் கோவில் முன்பு அம்மனுக்கு தமிழக போலீசார் சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதன் பின்பு அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், நவராத்திரி கொலு அமைப்பினரும் செய்திருந்தனர்.
இதையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள சாமி சிலைகள் கடந்த 3-ந் தேதி பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஊர்வலமாக திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டு சென்றன. நவராத்திரி விழா முடிந்ததும் 17-ந் தேதி சாமி சிலைகள் மீண்டும் குமரி மாவட்டத்திற்கு புறப்பட்டன.
நேற்று முன்தினம் பத்மநாபபுரம் அரண்மனை முன்பு வந்த போது சாமி சிலைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சரஸ்வதி அம்மன் சிலை தேவாரக்கட்டு கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு கருவறையில் வைக்கப்பட்டது. வேளிமலை முருகன் சிலையும் குமாரசாமி கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னுதித்த நங்கை அம்மன் சிலை பத்மநாபபுரம் நீலகண்டசாமி கோவிலில் தங்க வைக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு முன்னுதித்த நங்கை அம்மன் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணிக்கு சுசீந்திரம் வந்தடைந்தது. அங்கு அம்மன் சிலைக்கு, நவராத்திரி குழு தலைவர் வீரபத்ர பிள்ளை மற்றும் ஊர் தலைவர்கள், பொதுமக்கள் சார்பில் 4 ரத வீதிகள் வழியாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. மேலும் கோவில் முன்பு அம்மனுக்கு தமிழக போலீசார் சார்பில் அணிவகுப்பு மரியாதை கொடுக்கப்பட்டது. அதன் பின்பு அம்மன் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அம்மன் கருவறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில் நிர்வாகமும், நவராத்திரி கொலு அமைப்பினரும் செய்திருந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X